சர்வதேச வியாபாரி – தமிழ் சினிமாவில்
- Linda Miner
- May 15, 2017
- 1 min read

நமது நாட்டுவிவசாய பொருட்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தும் நிறு வனங்களை நடத்தி வரும்மற்றும் ஜான்சுதிர் நட்பு ரீதியாக தென்னிந்திய மொழிகளில் பலபடங்கள் வளர்வதற்கு நிதி உதவி செய்து வருகிறார்.
2013ஆம் வருடம் தனது நண்பர் ஒருவரின் வளர்ச்சிக்காக சுமந்த் நடிக்க “ஏமோ குர்ரம் எகரா வச்சு“ என்ற படத்தை தெலுங்கில் தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளரானார். அதற்குப்பிறகு ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனத்தைத் துவக்கி, ‘விக்கி டோனர்’ என்ற ஹிந்தி படத்தை தெலுங்கில் சுமந்தை வைத்து ரீமேக் செய்தார்.
சிறந்த கலைஞர்களை கொண்டிருக்கும் தமிழ் சினிமா துறைமீது அதிக ஆர்வம் உண்டு என்பதால் தமிழ் படங்களை தயாரிக்க முடிவு செய்தார். அதன்படி ரவிபார்கவன் இயக்கத்தில் பரத் நடிக்க “கடைசி பெஞ்ச் கார்த்தி“ என்ற பெயரில் தமிழிலும், “மல்லி பிரேமிஸ்தே“ என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரித்து வருகிறார். தெலுங்கில் பரத் நேரடியாக நடிக்கும்படம் இது.
எஸ்.எஸ்.ராஜமௌலியின் சகோதரர் எஸ்.எஸ்.காஞ்சி இயக்கத்தில், மரகதமணி இசையில், “ ஷோ டைம் “ என்ற பெயரில் தெலுங்கிலும், “காட்சி நேரம்“ என்ற பெயரில் தமிழிலும் தயாரித்து வருகிறார்.
அடுத்ததாக மஞ்சு விஷ்ணு நடிக்க, கார்த்திக் இயக்கத்தில், எஸ்.எஸ்.தமன் இசையமைக்க, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் தமிழ், தெலுங்கில் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார். தென்னகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற “காஞ்சனா 2“ படத்தின் கொரியா, சைனா, தா|ய்லாந்து, ஜப்பான் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கி இருக்கிறார். ஒரு தென்னிந்திய படத்தை உலக அளவில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கியிருக்கும் முதல் இந்திய தயாரிப்பாளர் ஜான் சுதிர் என்பது குறிப்பிடத்தக்கது.
RAMA Reels is a major movie producer in Tollywood of both Telugu and Tamil movies. RAMA Reels and associated banners have been involved in over 50 productions in India. With this foundation of success, RAMA is now reaching out to the rest of Asia with a vision to unite Asia under a singular Entertainment umbrella. RAMA Reels is a division of RAMA Group run by Chairman John Sudheer Pudhota
Opmerkingen